Home தேசிய செய்திகள் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை விவகாரம் வெளியாவதற்கு முன்பு ரூ.18 லட்சமாக இருந்த தினசரி டெபாசிட்...

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை விவகாரம் வெளியாவதற்கு முன்பு ரூ.18 லட்சமாக இருந்த தினசரி டெபாசிட் ரூ.24 லட்சம் ஆக உயர்வு

0

உத்தர பிரதேசத்​தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்​ஐடி) விசா​ரித்து வரு​கிறது.

இந்த விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வரு​வதற்கு முன்பு வரை, ​ராம ஜென்​ம பூமி தீர்த்த க் ஷேத்ரா அறக்​கட்​டளை​யின் வங்​கிக் கணக்கு​களில் தின​மும் சராசரி​யாக ரூ.16 லட்​சம் முதல் ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்​யப்​பட்​டுள்​ளது.

ஆனால், திருட்டு விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்த பிறகு, இந்​தத் தொகை தின​மும் ரூ.24 லட்​சம் முதல் ரூ.26 லட்​ச​மாக அதிகரித்துள்​ளது. இந்​தத் தரவு​களின் அடிப்​படை​யில், இதற்கு முன்பு தின​மும் ரூ.6 லட்​சம் முதல் 8 லட்​சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்று சந்​தேகிக்​கப்​படு​கிறது.

பக்​தர்​கள் காணிக்​கை​யாகச் செலுத்​திய தங்​கம், வெள்ளி மற்​றும் பிற விலைம​திப் ​பற்ற கற்​களின் துல்​லிய​மான அளவும், மதிப்​பும் வழக்​க​மான நடை​முறை​களின் பகு​தி​யாக இல்​லை. இந்​தக் குறைபாட்டை குற்​றம்சாட்​டப் ​பட்​ட​வர்​கள் தங்​களுக்கு சாதகமாகப் பயன்​படுத்தி உள்​ளனர். கோயி​லிலிருந்து திருடப்பட்ட நகைகளை உருக்​கி, தங்​கக் கட்​டிகளாக மாற்றியிருக்கலாம் என்​றும் எஸ்​ஐடி சந்​தேகிக்​கிறது.

ஏனெனில், கைதானவர்​களிட​மிருந்து திருடப்​பட்ட நகைகளை இது​வரை மீட்க முடிய​வில்​லை. நகைகளாகப் பெற்ற காணிக்கைகள் மற்​றும் அவற்​றைப் பராமரிக்​கும் தற்​போதைய நடை​முறை​கள் குறித்து எஸ்​ஐடி விரி​வாக விசா​ரணை நடத்​தி​யது. நகைகள் தொடர்​பான ஆவணங்​களை​யும், இந்​திய அரசின் நிறுவன​மான ‘பிரிண்​டிங் அண்ட் மின்​டிங் கார்ப்​பரேஷன் ஆஃப் இந்​தி​யா’ உடனான பரிவர்த்​தனை தொடர்​பான கோப்​பு​களும் ஆய்​வுக்​காக வரவழைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த நிறு​வனத்​துக்கு அனுப்​பப்​பட்ட உலோகங்​களின் முழு​மை​யான விவரங்​களை​யும் எஸ்​ஐடி அதி​காரி​கள் கோரி​யுள்​ளனர்.

இதனிடையே, அறக்​கட்​டளை சமர்ப்​பித்த வரு​டாந்​திர வரவு செலவு​கள் மீதான தணிக்கை கணக்​கு​களி​லும் தவறுகள் இருப்பதை எஸ்​ஐடி கண்​டு​பிடித்​துள்​ளது. இதை உறு​தி ​செய்ய அறக்​கட்​டளை​யின் முக்​கிய நிர்​வாகி​களான சம்​பத் ராய், அனில் மிஸ்ரா மற்​றும் கோபால் ராவ் ஆகியோரிட​மிருந்து சில முக்​கிய ஆவணங்​களை எஸ்​ஐடி கோரி​யுள்​ளது.

மத்​திய அரசின் முன்​னாள் உள்​துறை செய​லா​ள​ரான எஸ்​.லக் ஷ்மி நாரயணா தன் மனைவி சரஸ்​வ​தி​யுடன் கடந்த ஏப்​ரல் 2024ல் அயோத்​திக்கு வந்​துள்​ளார். அப்​போது தங்க முலாம் பூசப்​பட்ட 522 பக்க ராமச் ​சந்​திர​மானஸ் புனித நூலை (147 கிலோ) கோயிலுக்காக சம்​பத் ராயிடம் அளித்​துள்​ளார். கருவறையில்வைப்​ப​தாகக் கூறப்​பட்ட நூலை காண​வில்லை என்றும், இதற்​கான ரசீது அளிக்​க​வில்லை என்​றும் புகார் தெரிவித்​துள்​ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version