கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே மகாராஜபுரம் சாலையில் நடந்து சென்ற +2 மாணவி சிவ சந்தியா (18) மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
