Tuesday, June 6, 2023
No menu items!
Homeவிளையாட்டு செய்திகள்எந்த அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்: ஜாக் காலிஸ்- மைக்கேல் வாகன் கணிப்பு

எந்த அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்: ஜாக் காலிஸ்- மைக்கேல் வாகன் கணிப்பு

16-வது ஐபிஎல் சீசன் இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதுகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெல்ல வாய்ப்பு இல்லை எனவும் ராஜஸ்தான் அணிதான் வெல்லும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இது குறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது:- ஐ.பி.எல். போட்டியில் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கானது என்று கருதுகிறேன். அந்த அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் என்றார். அதேபோல் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் கூறும்போது:- ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றில் எந்த அணிகள் விளையாட போகின்றன என்பதை கணிப்பது எப்போதும் கடினமானது. ஏனென்றால் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் இடையே போட்டி இருக்கும். கோப்பையை டெல்லி அணி வெல்லும் என்று கருதுகிறேன் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments