நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று அதிகாலை 3.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்தனர். பின்னர் இவரது உடல் சென்னை வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமிக்காக புதுச்சேரியில் பார்த்திபனின் மக்கள் மன்றம் சார்பில் நினைவேந்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். இது தொடர்பான வீடியோவை பதிவிட்ட பார்த்திபன், மறையா மனிதம் மயில்சாமிக்கு…! என்று குறிப்பிட்டுள்ளார்.