Thursday, March 30, 2023
No menu items!
Google search engine
Homeஇந்தியா செய்திகள்கேரள மாநில மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது- அமித்ஷா

கேரள மாநில மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது- அமித்ஷா

கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: கேரள மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். கம்யூனிஸ்டுகளின் வன்முறை அரசியலையும் அவர்கள் ஏற்கவில்லை. இது எனக்கு நன்றாக தெரியும். கேரள மாநில மக்களை பாதுகாக்கவே மத்தியில் ஆளும் மோடி அரசு பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்தது. இது தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதால் இதனை விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கோபியும் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். இல்லையேல் கம்யூனிஸ்டுகள் பலம் வாய்ந்ததாக கருதும் கண்ணூர் தொகுதியிலும் போட்டியிட நான் தயார் என்றார். திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments