Friday, June 2, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்ராமன்புதூரில் ரோட்டோரத்தில் மீன், காய்கறி வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் மகேஷ்...

ராமன்புதூரில் ரோட்டோரத்தில் மீன், காய்கறி வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மேயர் மகேஷ் எச்சரிக்கை

நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் அதிரடி ஆய்வு மேற் கொண்டு வருகிறார். ராமன் புதூர் பகுதியில் ரோட்டோரத்தில் மீன் வியாபாரம் நடைபெறு வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயர் மகேசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து இன்று காலை மேயர் மகேஷ் ராமன் புதூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் மீன், காய்கறி வியாபாரிகள் ரோட்டோரத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். மீன், காய்கறி வியாபாரி களிடம் மேயர் மகேஷ் பேசினார். அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும். ரோட்டோரத்தில் போக்குவரத்து இடையூறாக கடை அமைத்து வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்யவும் கூறினார். இதைத்தொடர்ந்து ராமன்புதூர் பகுதியில் கழிவு நீர் ஓடை உடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. அதை உடனே சீரமைக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார். இது குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:- முன்மாதிரியான மாநகராட்சியாக… நாகர்கோவில் மாநகராட்சி யை முன்மாதிரியான மாநக ராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. போக்கு வரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பல்வேறு சாலைகளில் இருவழிப்பாதை யாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த நிலையில் ராமன் புதூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டோரங்களில் கடைகள் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரோட்டோர கடை வியாபாரியிடம் தனியார் பணம் வசூல் செய்ததை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மீன், காய்கறி வியாபாரிகள் அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மீன் வியா பாரம் செய்ய வேண்டும். ரோட்டோரத்தில் மீன், காய்கறி வியாபாரம் செய்தால் பாரபட்ச மின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் ரோட்டோரத்தில் கடை அமைத்தால் கடைகள் அகற்றப்படுவதுடன் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக் கப்படும். இதற்கு வியா பாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், ராஜா, கவுன்சிலர் தினகர், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.வராத தால் என்ன செய்வதென தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments