Tuesday, September 26, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்தமிழ்நாட்டில் ரசாயன பொருட்களை கொண்டு மீன்களை பதப்படுத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் பேட்டி

தமிழ்நாட்டில் ரசாயன பொருட்களை கொண்டு மீன்களை பதப்படுத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் பேட்டி

தஞ்சை கரந்தையில் உள்ள அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மீன் குஞ்சுகளை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகளை மீன்வளம், மீனவர் நலத்துைறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மீன் குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. உள்நாட்டு மீன் உற்பத்தியை தமிழ்நாட்டில் உள்ள மீன் குஞ்சு பண்ணைகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 75 சதவீத மீன் குஞ்சுகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கடல் மீன்களும் சேர்த்து ரூ.6500 கோடி அளவிற்கு வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.5000 நிவாரணம் தரக்கூடிய திட்டத்தை முதலமைச்சர் கொடுத்துக் கொண்டுள்ளார். இன்னும் அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார். எங்கேயாவது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . தஞ்சையில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. அதற்கான நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments