புதுவை கராத்தே சங்கம் சார்பில் 23-வது மாநில அளவிலான கராத்தே சாம்போ சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் துளசி சுழல் கோப்பை வழங்கும் விழா மதகடிப்பட்டு அமர்த்தீஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கராத்தே சங்க இணை ச்செயலாளர் மதிஒளி தலைமை தாங்கி பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இப்போட்டியில் கிராமப்புறங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன், சம்போ சங்க கவுரவத் தலைவர் திருவேங்கடம், உதவி ஆய்வாளர் ராஜசேகர், பேராசிரியர் ராஜவேலு, புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். ரங்கநாதன், திருக்கனூர் சுப்ரமணிய பாரதி பள்ளி தாளாளர் டாக்டர்.சம்பத் மதகடிப்பட்டு பராததேவி பள்ளியின் தாளாளர் இளமதி அழகன், திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளி தாளாளர் தனசெல்வம், சாம்போ சங்க நிர்வாகிககள் ஜனா ர்த்தனன், கோதண்ட ராமன், ரவிச்சந்திரன், சரவணன், பழனிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.
முதல் சுழல் கோப்பையை மதகடிப்பட்டு பாரத தேவி பள்ளி மாணவர்களும், இரண்டாவது சுழல் கோப்பையை திருக்கனூர் சுப்ரமணிய பாரதி பள்ளி மாணவர்களும் தட்டி சென்றனர்.
மூத்த பயிற்சியாளர்கள் கோபா லகிருஷ்ணன், செந்தில், கவிதா. லலிதா. தினேஷ், சரண், கரண் மற்றும் ரவிராஜ் கலந்துகொண்டு போட்டியின் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த கராத்தே மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.