Tuesday, October 3, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி

குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 10,508 மாணவர்களும், 11,572 மாணவிகளும் என மொத்தம் 22,080 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து பிளஸ்-1 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் 11,805 மாணவர்களும், 11,587 மாணவிகளும் என மொத்தம் 23,392 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியிலும், படந்தாலுமூடு சேக்ரட் கார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுதேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11,827 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 11,497 பேர் என மொத்தம் 23,324 பேர் தேர்வு எழுதினார்கள். இவர் களுக்கான விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விடைத் தாள்கள் திருத்தும் பணி இன்று காலை தொடங்கியது. தேர்வு கட்டுப்பாட்டை அதிகாரிகள் முன்னிலையில் விடைத்தாள்கள் வைக்கப் பட்டிருந்த அறையின் சீல்கள் உடைக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத் தாத்தள்கள் நாகர்கோவில் கார்மல் பள்ளியிலும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்துக்கான விடைத் தாள்கள் உண்ணா மலைகடை மெட்ரிக் பள்ளியிலும் திருத்தப்பட்டு வருகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஒரு வார காலத்திற்குள் விடைத் தாள்கள் திருத்தி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments