Friday, June 2, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா முடிவு

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா முடிவு

அரேபியா நாடுகள், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகளாலேயே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒபெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்த கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன. இந்நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள சவுதி அரேபியா தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க உள்ளது.

வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன. இதனால் ஒட்டுமொத்தமாக ஒபெக் கூட்டமைப்பில் இருந்து பெறப்படும் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைய உள்ளது. கச்சா எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவே தன்னிச்சையாக இந்த உற்பத்தி குறைப்பை மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா உள்ளிட்ட ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments