Friday, June 2, 2023
No menu items!
Homeசினிமா செய்திகள்முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சரத்குமார்- விதார்த் படக்குழு

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சரத்குமார்- விதார்த் படக்குழு

தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்களில் நிரூபித்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது அறிமுக இயக்குனர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

மேலும், இந்த படத்தில் மலையாள நடிகர் ஆர். நந்தா, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எம் 360 (M360°) ஸ்டுடியோஸ் சார்பில் ரோஷ் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு வேத் சங்கர் சுகவனம் இசையமைக்க குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே ‘சமரன்’ திரைப்படம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ‘சமரன்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments