Sunday, September 24, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் பக்தர்களுக்கு கை நீட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் பக்தர்களுக்கு கை நீட்டம்

தொடர்ந்து திருவிளக்கு ஏற்றப்பட்டு 5 மணிக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றது. 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாகன பவனி முடிந்தவுடன் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அய்யாவுக்கு பூ, பழம், தேங்காய் பன்னீர் மற்றும் பல தரப்பட்ட பழ வகைகளை சுருள்களாக வைத்து வழிபட்டனர். குருமார்கள் ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த் ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கினர். குரு பால ஜனாதிபதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துரை வழங்கினார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் பள்ளி அலங்காரம் மற்றும் பணி விடைகளை செய்திருந்தனர். தமிழ் புத்தாண்டை யொட்டி அய்யா வைகுண் டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட் டங்களை சேர்ந்த திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments