Sunday, September 24, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்அம்மா உணவகங்களில் ஊழியர்கள் சம்பளம் குறைப்பு

அம்மா உணவகங்களில் ஊழியர்கள் சம்பளம் குறைப்பு

சென்னை மாநகராட்சியில் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க கடந்த 2013-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. சென்னையில் தற்போது 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களில் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருமானம் கிடைக்கிறது. ரூ.140 கோடி செலவு ஏற்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. 10 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ.1200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது:- ஒரு அம்மா உணவகத்தில் இதுவரை 10 முதல் 12 பேர் வரை பணியாற்றினோம். தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு மாத சம்பளம் ரூ.9000 வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.6000 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. தினசரி வருவாய் ரூ.2000 முதல் ரூ.2500 வரை இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். போதிய வருமானம் கிடைக்காத நேரத்தில் எங்களது சொந்த பணத்தை கொடுத்து இலக்கை அடைந்து வருகிறோம். இதனால் பலர் வேலையைவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தின் நஷ்டத்தை தவிர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments