Monday, June 5, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கோட்டாரில் முன் விரோதத்தில் ரவுடி கொலை- வாலிபர் கைது

கோட்டாரில் முன் விரோதத்தில் ரவுடி கொலை- வாலிபர் கைது

கோட்டார் பட்டக சாலியன்விளை பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29). இவரது வீட்டிற்குள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பீச் ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் அவரது நண்பர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து உடைத்தனர். இதுகுறித்து ரஞ்சித்தின் தாயார் சாந்தி நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிவசங்கர் உட்பட அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ரஞ்சித் அவரது நண்பர் விக்னேஷ் (29) இருவரும் மோட்டார் சைக்கிளில் பெரிய விளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிவசங்கர் இருவரையும் வழிமறித்தார். அப்போது ரஞ்சித்திடம் என் மீது எப்படி நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த அவரது நண்பர் விக்னேசுக்கும் காயம் ஏற்பட்டது. ரஞ்சித், விக்னேஷின் சத்தம் கேட்டு அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்னேஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிவசங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ரஞ்சித் மீது சில வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments