கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடைக்காகுழி ஊராட்சியில் உள்ள பெருங்குளம் – தச்சக்காணி செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பெருங்குளம் – தச்சக்காணி செல்லும் சாலையில் காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பெருங்குளம்-தச்சக்காணி சாலை சீரமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், அடைக்காகுழி ஊராட்சி தலைவர் ஜெயராணி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், அடைக்காகுழி ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகவன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜினோ, சுனில் குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்