Thursday, September 28, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 610 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சை -...

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 610 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சை – கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஏராளமா னோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய் பாதிப்ப டைந்தவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்க ளுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் உயர் ரத்த அழுத்தம் நோயி னால் பாதிக்கப்பட்ட 91 ஆயிரத்து 532 பேருக்கும், நீரிழிவு நோயினால் பாதிக் கப்பட்ட 65 ஆயிரத்து 623 பேருக்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 63 ஆயிரத்து 236 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுக்கை நோயாளிகள் 8 ஆயிரத்து 792 பேருக்கும், புற்றுநோய் தொடர்புடைய 274 பேருக்கும், உடற்பயிற்சி சிகிச்சை (பிசியோதெரபி) வாயிலாக 9 ஆயிரத்து 610 பேருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது.இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments