Tuesday, October 3, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கவே பெலாரஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தம்: புதின்

மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கவே பெலாரஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தம்: புதின்

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. தோராயமாக 5-ல் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

அதை மீட்பதற்காக உக்ரைன் தற்போது பதில்தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவதால் ரஷியப் பகுதியில் சேத்திற்குள்ளாகி வருகிறது. உக்ரைன் எதிர்தாக்குதல் அதிகரிக்க, ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று ஆப்பிரிக்கா தலைவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது கிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

தெற்கு பகுதியில உக்ரைன் எல்லையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து பாதுகாப்பான பகுதியாக வைத்துக் கொள்ள ரஷிய அதிபர் திட்டமிட்டுள்ளார். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான பெலாரஸ் ரஷியாவுக்கு உதவி செய்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி ரஷியாவை தோற்கடிக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது. இதனால் பெலாரஸில் அணுஆயுதங்களை நிலைநிறுத்தி எச்சரிக்கை கொடுக்க புதின் முடிவு செய்தார். பெலாரஸ் அதிபரும் சம்மதிக்க அதற்கான இடத்தை தயார் செய்து வருகிறது ரஷியா. அணுஆயுதங்களை வைப்பதற்கான இடத்தை அமைத்தபின், அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து பெலராஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அணுஆயுதங்கள் பெலாரஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. பெலாரஸில் அணுஆயுதங்களை நிலைநிறுத்துவதே, மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கை செய்வதற்காகத்தான் என புதின் தெரிவித்துள்ளார். ரஷியாவுக்கு மூலோபாய தோல்வியை ஏற்படுத்த முடியாது என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு நினைவூட்டுவதற்காக, பெலாரஸுக்கு தந்திரோபாய அணுஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே பெலராஸ்க்கு அணுஆயுதங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்டது. இருந்தாலும், தற்போது உக்ரைனுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தும் தேவை இருக்காது. நான் ஏற்கனவே பெலாரஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியும். அது நடந்துவிட்டது. முதல் அணுஆயுத தடவாளங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இது முதல்முறையின் முதல் பகுதி. கோடைக்காலத்திற்குள் அல்லது இந்த வருட இறுதிக்குள் இந்த வேலை முழுமையாக முடிவடையும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments