Tuesday, October 3, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்கல்லூரிகளில் புதிய பாடத் திட்டம்: மாநில அரசை ஏ.ஐ.சி.டி.இ. கலந்து ஆலோசிக்க வேண்டும்- அமைச்சர் வேண்டுகோள்

கல்லூரிகளில் புதிய பாடத் திட்டம்: மாநில அரசை ஏ.ஐ.சி.டி.இ. கலந்து ஆலோசிக்க வேண்டும்- அமைச்சர் வேண்டுகோள்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசும் போது கூறியதாவது:- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவு தொடங்கி இருப்பதாகவும் புதிய தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் அதே படிப்புக்கு ரூ.13,000 வசூலிக்கும் நிலையில் இதற்கு மட்டும் ரூ.ஒன்றரை லட்சம் வசூலிக்க இருப்பதாகவும் இந்தப் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்வதால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காது என்றும் சொல்லப்படுகிறது.

அந்த பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பி.டெக், எம்.டெக் போன்ற படிப்புகளை எல்லாம் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கக்கூடிய உரிமை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தான் இருக்கிறது என்றும், நெல்லை பல்கலையில் இருந்த எம்.டெக் படிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும், சேலம் பல்கலைக்கழகத்தில் எம்டெக் நடைபெற்றது, தற்போது நிறுத்தப்பட்டதாக கூறிய அவர், இந்த ஆண்டு பி.டெக் படிப்பை துவங்குவதற்கு ஒரு தனியார் கல்லூரியில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அரசின் கவனத்திற்கு வரவில்லை, காலையிலேயே இதுகுறித்து துணைவேந்தரிடம் பேசியுள்ளேன். ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி கொடுத்ததாக சொல்லி இருக்கிறார்கள். இது போன்று மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் அனுமதி கொடுக்கக் கூடாது என ஏ.ஐ.சி.டி.இ.-ஐ கேட்டுக் கொள்கிறேன். சேலம் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற படிப்பு நடைபெறாது. அதற்கான அனுமதி கொடுத்திருந்தால் அதை நிறுத்த சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments