Tuesday, October 3, 2023
No menu items!
HomeUncategorizedநிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை

நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திடீரென டேவிட் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து ராஜனும், ரமேசும், டேவிட்டை பார்த்து வேலைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வைத்தியநாதபுரம் பகுதியில் கோவில் முன்பு டேவிட் படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து அவரது தாயார் சாந்தி, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் (37), ரமேஷ் (38), கண்ணன் (40),வில்சன்(37) உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய் யப்பட்ட 7 பேரும் ஜாமீனில் விடுதலையான நிலையில் நாகர்கோவில் கூடுதல் விரைவு அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய கண்ணன் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கில் தொடர்புடைய ராஜன், ரமேஷ், வில்சன் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜரா னார்கள். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜன் என்ற பரமராஜன், ரமேஷ், வில்சன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும் தீர்ப்பில் அவர் கூறி உள்ளார். பரம ராஜன், ரமேஷ், வில்சனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments