Tuesday, September 26, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்என்னை தோற்கடிக்க இது குஜராத் இல்லை: ஜெகதீஷ் ஷெட்டர்

என்னை தோற்கடிக்க இது குஜராத் இல்லை: ஜெகதீஷ் ஷெட்டர்

முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர், உப்பள்ளி மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், கட்சியில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்பது என்னுடைய பொறுப்பு என்றும் கூறி இருந்தார். இதுகுறித்து கொப்பலில் ஜெகதீஷ் ஷெட்டரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவேன் என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகின்றனர். நான் உப்பள்ளி மக்களின் இதயத்தில் இருக்கிறேன். உப்பள்ளி மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்கு தெரியும். நான் எப்படிப்பட்டவன் என்பது பற்றி தொகுதி மக்களுக்கு தெரியும். அதனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. என்னை தோற்கடிக்க இது குஜராத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல் அல்ல. கர்நாடகத்தில் நடக்கும் தேர்தல். இதனை பா.ஜனதா தலைவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments