Monday, June 5, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்மேலும் 6 பேருக்கு கொரோனா - டாக்டர்கள் ஆலோசனை

மேலும் 6 பேருக்கு கொரோனா – டாக்டர்கள் ஆலோசனை

குமரி மாவட்டத்தில் கொரானா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு மற்றும் சளி தொல்லையால் அவதிப்படுபவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 298 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலம், தக்கலை ஒன்றிய பகுதிகளில் தலா ஒருவரும், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 2 பேரும், குருந்தன்கோடு ஒன்றிய பகுதியில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா அதிகரித்து வருவதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்து றை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை சுகாதாரத்து றை மேற்கொண்டு வரு கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் ஒத்திகை நடை பெற உள்ளது. இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு நடவ டிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ் உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப்சென் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ் கூறியதாவது:- கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்பொழுது காய்ச்சலுக்காக தனி புற நோயாளிகள் பரிசோதனை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் காய்ச்ச லுக்கு தனி வார்டும் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா பரவல் இருந்த கால கட்டத் தில் கொேரானா சிகிச்சை வார்டுகள் தனியாக இருந்தது. தற்போது அங்கு மீண்டும் கொரானா சிகிச்சை வார்டுதொடங்கப்பட உள்ளது. பரிசோதனை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். போதுமான அளவு ஆக்ஸி ஜன் மருந்துகள் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.பாதிப்பு அதிகமாக ஏற்பட் டால் அதை சமாளிக்கவும் தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments