Monday, December 4, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்ரூ.1 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி- இறையன்பு நேரில்...

ரூ.1 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி- இறையன்பு நேரில் ஆய்வு

சென்னையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.55.61 கோடி மதிப்பில்,78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகளும், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பில், 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300சாலைகளும், நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பில் 75.16கிலோமீட்டர் நீளத்தில் 405 சாலைகளும் என மொத்தம் ரூ. 124.71 கோடி மதிப்பில், 204.82 கிலோமீட்டர் நீளத்திற்கு, 1157 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நகர்ப்புர சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.151கோடி மதிப்பில், 221.88 கிலோமீட்டர் நீளத்தில் 1408 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை கண்காணிக்க முதன்மைச் செயலாளர், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தலைமை செயலாளர் இறையன்பு, நேற்று இரவு 10.30 மணியளவில் வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில், நடைபெற்று வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணா மடம் சாலையில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே போடப்பட்ட சாலை அகழ்ந்தெடுக்கப் பட்டதையும், அதன் ஆழத்தையும் ஆய்வு செய்து சாலை அளவினையும், தார்க்கலவையின் தரத்தினையும், சாலையின் நடுவில் இருந்து ஓரத்திற்கான சாய்வு அளவினையும் பார்வையிட்டு, உரிய அளவுகளின்படி, சரியான தரத்திலும் சாலை அமைப்பதை பார்வையிட்டு அறிவுறுத்தினார். அப்போது கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் சமீரன், துணை ஆணையர்கள் ஷேக் அப்துல் ரஹ்மான் சிவகுரு பிரபாகரன், அமித், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்புப் பொறியாளர் சரவணபவானந்தம் உடன் இருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments