Thursday, September 28, 2023
No menu items!
Homeவிளையாட்டு செய்திகள்அனிருத், சாய் கிஷோர் அரை சதம் - திருப்பூர் அணி 201 ரன்கள் குவிப்பு

அனிருத், சாய் கிஷோர் அரை சதம் – திருப்பூர் அணி 201 ரன்கள் குவிப்பு

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. சேலத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் கிஷோர், ராதாகிருஷ்ணனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய சாய் கிஷோர் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 45 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விஜய் சங்கருடன், அனிருத் அதிரடியை தொடர்ந்தனர். அனிருத் 25 பந்தில் 51 ரன் குவித்து வெளியேறினார். இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்களை குவித்தது. விஜய சங்கர் 31 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments