Wednesday, December 6, 2023
No menu items!
Homeசினிமா செய்திகள்நீதிமன்றத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

நீதிமன்றத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் சொத்து, வங்கி கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையை நீதிபதி ஆஷா வரும் 29-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments