Tuesday, September 26, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிளை திருடி தனியாக பிரித்து விற்பனை செய்த வாலிபர் கைது

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிளை திருடி தனியாக பிரித்து விற்பனை செய்த வாலிபர் கைது

குலசேகரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை என்று குலசேகரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்தன. சுமார் 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தன. இதனால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் குலசேகரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகண்டன் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் குலசேகரம் அருகே செறுதிக்கோணம் அரியம்போடு பகுதியில் ஒருவர் வீட்டின் அருகில் பழைய மோட்டார் சைக்கிளை பிரித்து வைத்திருப்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது சுமித் (வயது 27) என்பவர் வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை பிரித்து வைத்திருந்தை பார்த்து விசாரித்தனர். இவர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளை திருடி தனி தனியாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சுமார் 5 மோட்டார் சைக்கிளின் பாகங்களை பறிமுதல் செய்து சுமித்தை கைது செய்தனர். இவர் எங்குயிருந்து எல்லாம் மோட்டார் சைக்கிள் திருடியிருக்கிறார். எந்த பகுதியில் விற்பனை செய்து இருக்கிறார் என்று போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments