Tuesday, October 3, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்நெல்லை-நாகர்கோவில் என்ட் டூ என்ட் பஸ்சில் பர்சை தவறவிட்ட வாலிபர்

நெல்லை-நாகர்கோவில் என்ட் டூ என்ட் பஸ்சில் பர்சை தவறவிட்ட வாலிபர்

தூத்துக்குடியை சேர்ந்த வர் குமாரசாமி (வயது 40). இவர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு வந்தார். பின்னர் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு என்ட் டூ என்ட் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் வடசேரி பஸ் நிலையத்தை வந்தடைந்ததும் குமாரசாமி பஸ்சை விட்டு இறங்கினார். பின்னர் பஸ் நிலையத்தி லிருந்து அண்ணா பஸ் நிலையம் சென்ற பஸ்சில் குமாரசாமி பயணம் செய்தார். அப்போது அவரது பர்ஸ் மாயமாகி இருந்ததை பார்த்து குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார்.உடனே பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் பயணம் செய்த என்ட் டூ என்ட் பஸ் அங்கு நின்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சில் ஏறி குமாரசாமி பர்சை தேடினார். அப்போது அங்கு பணியில் இருந்த கண்டக்டர்கள் குமாரசாமி யிடம் விசாரித்தனர். அப்போது குமாரசாமி பயணம் செய்த பஸ்சில் கிடந்த பர்ஸை நடத்து னர்கள் சுரேஷ், சகாயராஜ் இருவரும் எடுத்து போக்கு வரத்து கழக அதிகாரி சிவராஜிடம் ஒப்ப டைத்தது தெரிய வந்தது. இதை யடுத்து குமாரசாமி பஸ் நிலை யத்தில் இருந்த அதிகாரி குமாரசாமிடம் சென்று தனது பர்ஸ் மாய மானது குறித்து தகவலை தெரி வித்தார். மேலும் அந்த பர்சின் அடையாளங்களை கூறினார். அதிகாரி பர்சை சோதனை செய்த போது ரூ.6 ஆயிரம் பணம் இருந்தது. இதைத்தொ டர்ந்து குமாரசாமியிடம் அதிகாரிகள் அவரது பர்சை ஒப்படைத்தனர். பஸ்சில் கிடந்த பர்சை எடுத்து ஒப்படைத்த நடத்துனர்கள் சுரேஷ், சகாய ராஜன் இருவரையும் அதிகாரிகளும், சக பயணிகளும் பாராட்டினார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments