நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.